புதுதில்லி, டிச.24- ஹரித்துவாரில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் வெறுப்பைக் கக்கி பேசியவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஹரித்துவாரில் ‘மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் வெறுப்பைக் கக்கி யிருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்டுள்ள சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ள செயலாகும். இங்கே பேசியவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்கள்.
இவ்வாறு இவர்கள் பேசியிருப்பது பயங்கர வாதச் சட்டங்களை ஆதரிப்பதற்குஒத்ததாகும். இவர்களின் வெறுப்பை உமிழும் பேச்சுக் களை பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் கண்டுகொள்ளாது ஆதரிப்பதால் இவர்கள் இந்த ‘மதங்களின் நாடாளுமன்றத்தில்’ தொடர்ந்து எவ்வித இடையூறுமின்றி மூன்று நாட்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்து மிகவும் தாமதமாக இவ்வாறு பேசியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் வெட்கக் கேடா கும். மிகவும் மோசமாகப் பேசிய மதவெறி யர்களின் காணொலிப்படங் கள் வெளி வந்துள்ள போதிலும், இவ்வாறு பேசியவர்கள் யார் என்று அவைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ள போதிலும் இவர்களில் எவர் பெய ரும் இந்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
இவர்களின் பெயர்களை இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு இந்தக் கயவர்கள் வெறுப்பை உமிழ்ந்ததற்காக மட்டுமல்லாது வன்முறையைத் தூண்டியதற்காகவும் உடனடி யாகக் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.