சு.வெங்கடேசன் எம்.பி.,
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகை யில், தந்தையின் அன்பையும், அரவணைப்பையும் பெற முடியாத மகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தந்தையின் கனவையும், லட்சியத்தையும் வாழ்க்கை முழுதும் பெற்றேன் என்பதை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிற புரட்சிப் பெண் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். உங்களைப் போல்தான் நாங்களும் எங்களின் தந்தையின் அன்பை பெற்றதில்லை. மார்க்ஸ் என்ற மகத்தான தந்தையின் அன்பை, புரட்சியாளர் லெனின் என்ற மகத்தான தந்தையின் அன்பை, ஏகாதிபத்தியத்தின் இடுப்பு எலும்பை உடைப்பதை பொழுதுபோக்காக உலகத்திற்கு நிகழ்த்திக்காட்டிய பிடல் காஸ்ட்ரோ என்ற தந்தையின் அன்பை பெற்றதில்லை. அந்த தந்தைகளின் அறிவால் உணர்வால் வளர்க்கப்பட்ட உங்களைப் போன்ற பிள்ளைகள்தான் இந்த அரங்கம் முழுவதும் நிரம்பி யிருகிறோம் என்றார்.
இளமையின் அடையாளம்
தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், சிங்கார வேலரையும் இந்த மண்ணில் எங்களை வளர்த்த இந்த தந்தையர் களை நாங்கள் கண்டதில்லை. ஆனால் அவர்களில் அறிவால், ஆற்றல் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் உங்களை வரவேற்கிறோம். உலகம் முழுக்க திருவிழாக்களின் அடிப்படை இளமையைக் கொண்டாடுவது. அது எந்த மதமானாலும், எந்த நிறுவனம் ஆனாலும் இளமையையை கொண்டாடுவதுதான் அடிப்படை. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உலகம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் இளமையின் அடையாளம் சேகுவேரா. நெற்றியின் உச்சியில் மின்னுகிற நட்சத்திரம் அடிமைபடுத்திய இருளை உலகெங்கும் அகற்றும் நட்சத்திரமாக எங்கள் கொடிகளில் ஏந்தி, உலகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக் கிறோம். குத்துச்சண்டையை ஒரு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிற பார்வையாளர் கையை மடக்கி காற்றிலே ஒரு குத்து விடுவார். அதைப்போலத்தான் சேகுவேரா என்ற பெயரை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, படித்துக் கொண்டிருக்கும் போதே ஏகாதிபத்தியத்தின் அரசியலை நொறுக்குகிற விசையை தன் உடலெங்கும் செலுத்துகிற கம்யூனிஸ்டுகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு உரத்தை ஊட்டுபவராக சேகுவேரா விளங்குகிறார்.
மகா வாக்கியங்கள்
உலகில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும் பல மகா வாக்கியங்கள் உண்டு. புத்தரின் மகா வாக்கியம் ஆசையே அழிவுக்கு காரணம் என்பது. இதுபோன்று பல மகா வாக்கியங்கள் உண்டு. ஆனால் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உலகத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத மகா வாக்கியங்களை எழுதிய மகா தத்துவ ஞானிகள் 2 பேர். “இழப்ப தற்கு எதுவுமில்லை அடிமை விலங்கைத் தவிர, பெறுவதற்கோ பொன்னுலகம் இருக்கிறது” என்பது நெஞ்சிலே பொறித்து வைத்த மகா வாக்கியம். அதேபோல் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற மகா வாக்கியத்தை பிடல் காஸ்ட்ரோ உருவாக்கினார். வரலாறு முழுக்க அடிமைப்பட்டவனின் கனவு வாக்கியம், லட்சிய வாக்கியம் வரலாறு என்னை விடுதலை செய்யும் என்பது. “எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ, அந்த அநீதியைக் கண்டு பொங்கி எழுவாயானால் நீயும் என் தோழனே” என்ற மகா வாக்கியத்தை உலகிற்கு சேகுவேரா கூறினார். அதை அவர் கூறிய சூழல் மிக முக்கியமானது. கியூப புரட்சி வெற்றி பெற்றபோது, சேகுவேராவிற்கு ஒருவர் கடிதம் எழுதினார். குவேரா என்ற உன் பெயருக்கு பின்னால் இருக்கிற குலம்தான் என்னுடைய குலம். உனது வெற்றி கண்டு நான் பெருமைப்படு கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சேகு வேரா, வெற்றியில் பங்கெடுக்க குவேரா என்ற குலத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அநீதிக்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ, அவன் எல்லாம் என் தோழன், குலமல்ல முக்கியம் என்று கூறினார்.
எழுச்சியின் இதய நாளங்களாக...
உலகம் முழுவதும் அடிமைச் சங்கிலியை உடைக்க யாரெல் லாம் போராடுகிறார்களோ, அவர்கள் எல்லாம் சேகுவேராவை தோழனாக நெஞ்சிலே பதித்திருக்கிற மகா வாக்கியம்தான் அது. உலகம் முழுவதும் இன்று வலதுசாரி அரசியல் மேலோங்கி வரும் இந்த நேரத்தில் லத்தின் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரி அரசியல் மேலோங்கி வருகிறது என்றால் அந்த மகத்தான எழுச்சி யின் இதய நாளங்களாக இருப்பது பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும்தான். ஏகாதிபத்தியத்தை, வல்லாதிக்கத்தை வீழ்த்த முடியுமா? முடியாதா என்பதல்ல. நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு உதா ரணமாக தன் வாழ்க்கையை நிலை நிறுத்தியவர் சேகுவேரா. அது மட்டுமல்ல, அந்த கண்டத்தின் கீழ் முனையிலே ஒரு சின்னஞ்சிறு தீவில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் அடக்குமுறையை எங்களது எளிய கால்களால் தகர்த்துக் காட்ட முடியும் என்பதை நிருபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது கியூபா.
மின்னலைப்போல் இருள்கிழிக்கும்...
கியூபாவிற்கு ஆதரவளிக்கிறோம் என்பது, ஏகாதிபத்தி யத்தின் அடக்குமுறைக்கு, அடிமைத்தனத்திற்கு, சுரண்டலுக்கு, எரியூட்டுகிற எல்லா அசமத்துவத்திற்கு எதிரான மனிதர்கள்தான் என்பதை வெளிப்படுத்துகிற வாக்கியம்தான் கியூபாவின் ஒருமைப் பாட்டிற்காக நாம் குரல் கொடுக்கிறோம் என்ற மகத்தான வாக்கியம். ஏனென்றால் இருள் மூழ்கிக் கிடக்கிறது. மூழ்கிக் கிடக்கும் இருளை அகற்ற சிலர் விளக்கைப் பிடிப்பார்கள். அது சிறிது தூரம் இருளை விலக்கும். சிலர் டார்ச்லைட் அடிப்பார்கள். அது இன்னும் சிறிது தூரம் இருளை அகற்றும். ஆனால் நீங்கள் எங்கள் மீது எவ்வளவு இருட்டை செலுத்தினாலும், ஒரு மின்னலை போல நகரத்தின் இருட்டை கிழித்து அகற்றும் ஆற்றலை சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ வழங்கினார்கள். உலகம் முழுக்க இருளை அகற்றும் ஆற்றலோடு, என்னை நீங்கள் கொன்றிடலாம், ஆனால் ஒருபோதும் என்னை நீங்கள் தோற்கடிக்க முடியாது என்று சொன்னார் சேகுவேரா. மனிதனை மனிதனாக மதிக்கும் மனித சமூகத்தை, தோழமை கொண்ட சமூகத்தை அமைக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார் களோ அவர்களுக்கெல்லாம் உத்வேகம் அளிக்கும் வார்த்தை, உயிர் கொடுக்கும் வார்த்தை, “நீங்கள் எவ்வளவு முறை எங்களை நசுக்கினாலும், எங்கள் ரத்தத்தை குடித்தாலும், துடித்து விழுந்த ஒற்றைத் துளியில் இருந்து மீண்டு வருவோம், எங்களை நீங்கள் வெல்லலாம், ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்ற வார்த்தை. அந்த வார்த்தையை நெஞ்சில் சுமந்து முன்னேறுவோம் என்று கூறினார் சு.வெங்கடேசன்.