புதுதில்லி, மே 14- இந்தியன் ரயில்வே துறையானது, கடந்த 6 ஆண்டுகளில், அவசியமற்ற பணியிடங்கள் என்று மொத்தம் 72 ஆயி ரம் பணியிடங்களை ஒழித்துக் கட்டி யிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே துறை களில் ஒன்றாகவும், அதிகமானோ ருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அர சுத்துறையாகவும் இந்திய ரயில்வே இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய தொழில்நுட் பங்கள் வந்துள்ளதால், 72 ஆயிரம் பணி யிடங்களுக்கான தேவை இல்லை என்று கூறி, மோடி அரசு அவற்றை ஒழித்துக் கட்டியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 81 ஆயிரம் பணியிடங்கள் தேவையில்லை என்று ரயில்வே மண்டலங்களிலிருந்து பரிந்து ரைகள் வந்த நிலையில், இவற்றில் அதில் குரூப்-சி மற்றும் குரூப்-டி பிரி வில் இருக்கும் 72 ஆயிரம் பணி யிடங்களை மட்டும் இந்திய ரயில்வே தற்போது நீக்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரயில்வே துறை வரும் காலத்தில் ஆட்களை எடுக்கப் போவதில்லை என்பதுடன், தற்போது இந்த பணிகளைச் செய்து வரும் ஊழியர்களையும் வேறு பணி யிடங்களுக்கு மாற்ற உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், இந் திய ரயில்வேயில் உள்ள 16 மண்ட லங்களிலும் மொத்தம் ல் 56 ஆயிரத்து 888 பணியிடங்கள் அவசியமில்லை என்ற காரணத்துக்காக நீக்கப்பட்டுள் ளன. 15 ஆயிரத்து 495 பணியிடங்கள் விரைவில் நீக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக வடக்கு ரயில்வே-யில் 9 ஆயிரம் பணியிடங்களும்,
தெற்கு ரயில்வே-யில் 7 ஆயிரத்து 524 பணி யிடங்களும், கிழக்கு ரயில்வே-யில் 5 ஆயிரத்து 700 பணியிடங்களும், தென் கிழக்கு ரயில்வேவில் 4 ஆயிரத்து 677 பணியிடங்களும் நீக்கப்பட்டுள்ளன. ரயில்வே செயல்பாடுகள் நவீனமாக வும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ள தாலும் ஊழியர்களின் தேவை குறைந்து விட்டதாக ரயில்வே துறை தெரிவிக்கி றது. உண்மையில், ரயில்வே பணி களை அவுட்சோர்சிங் முறையில் தனியா ருக்கு கொடுத்ததே ரயில்வே-யில் தற்போது 72 ஆயிரம் பணியிடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டதற்கு காரணம் என்று ரயில்வே ஊழியர்கள் தெரி விக்கின்றனர். ரயில்வே-க்கு வரும் ஒரு ரூபாய் வரு மானத்தில் 37 காசுகள் ஊழியர்களுக் காகவும் 16 காசுகள் ஓய்வூதியர் களுக்கும் செலவு செய்யப்படுகிறது. வருவாயில் மூன்றில் ஒரு பங்கு ஊழி யர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் செலவாகிறது. ரயில்வே-யில் தேவைக் கான அதிகமான ஊழியர்கள் பணி யாற்றுவதே இந்த செலவிற்கு காரணம். இதுவே ஆட்குறைப்புக்கு காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறும் நிலை யில், இது பொருந்தாத காரணம் என்றும், ரயில்வே துறை இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தொழில், வர்த்தகம், வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்கை ஆற்றி வருவதையும், அதன் மூலம் நாடு பெறும் பொருளாதார ரீதி யான வளர்ச்சியையும் ஒன்றிய ஆட்சி யாளர்கள் திட்டமிட்டு மறைப்பதாகவும், தனியார்மய நடவடிக்கைக்காகவே பணியிடங்களையும் அவர்கள் ஒழித்துக் கட்டி வருவதாகவும் ரயில்வே ஊழி யர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.