tamilnadu

புதுக்கோட்டையில் 2023 பிப்ரவரியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு

மதுரை, செப்.26- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 10-ஆவது மாநாடு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடை பெறவுள்ளதாக மாநிலத் தலைவர் ஏ.லாசர் ஞாயிறன்று மதுரையில் தெரிவித்தார். மாநில மாநாட்டையொட்டி வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் புதுக்கோட்டையில் செப்.27-ஆம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் அமைப்பின் மாநிலச் செயலாளருமான எம்.சின்னதுரை, மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப்பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

;