தூத்துக்குடி, ஜூன் 16- புளியம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் தொலை வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சந் தீப் நந்தூரி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் புளியம் பட்டி புனித அந்தோணியார் திருத்தலத் தில் நடைபெற்ற சமுதாய மனநல திட்டம் தொலை மருத்துவம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந் தூரி தலைமையில் சனியன்று நடை பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி யர் கலந்துகொண்டு மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் தொலை வாக னத்தினை பார்வையிட்டு கொடிய சைத்து துவக்கி வைத்தார் . இவ்விழா வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம் புளியம் பட்டி சமுதாய மனநல மறுவாழ்வு மையத்தை சில மாதங்களுக்கு முன் பாக அமைச்சர் பெருமக்கள் நேரடி யாக வருகை தந்து திறந்து வைத் தார். இந்த சமுதாய மனநல மறுவாழ்வு மையத்தில் வாரத்திற்கு சுமார் 30 முதல் 40 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை கள் அளிக்கப்படுகிறது. இன்று தூத் துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் சமுதாய மனநல திட்டம் தொலை மருத்துவம் தொடக்க விழா நடை பெற்றது. விழாவில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த தொலை வாக னம் மாதத்தில் 4 நாட்கள் தொடர்ச்சி யாக ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு சென்று மனநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மனநலம் மற்றும் மனநோய் பற்றிய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த வாகனம் மூலம் மருத்துவமனை செல்ல இயலாத மனநோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்கள் இந்த தொலை வாகனத்தின் மூலம் பெரிதும் பயன் பெறுவார்கள். இந்த வாகனத்தில் மன நோயாளிகளை பரிசோதிப்பதற்கு ஒரு சமூக பணியாளர், ஒரு செவிலியர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார் கள். மேலும் மனநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு புளியம்பட்டி அந்தோணியார் திருத்தல வளாகத்தில் வெளிநோயாளிகள் மையம் ஏற்படுத் தப்பட்டு சிறப்பான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை மேற் கொண்டு வருகின்றார்கள். சிகிச்சை யில் குணமடைந்தவர்களுக்கு அந்தோ ணியார் கோயில் வளாகத்திலேயே மன நல வாழ்வு மையம் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி யை சமூக பணியாளர் மேற்பார்வை யில் மன நோயாளிகள் மெழுகுவர்த்தி தயாரித்தல், காகிதபை தயாரித்தல், ஜெபமாலை தயாரித்தல், கொலுசு தயாரித்தல், செயற்கை பூச்செண்டுகள் தயாரித்தல் போன்றவை செய்து வரு கின்றனர். மனநலம் பாதிப்பு என்பது ஒரு நோய் அல்ல. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவர் களின் ஆலோசனைகளின்படி தேவை யான சிகிச்சை பெற்றால் குணமடைய லாம் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.