tamilnadu

img

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும்!

கோயம்புத்தூர், டிச. 20 - இந்திய ஜனநாயகத்தை படுகுழி யில் தள்ளும் கொடுமையான சட்டம் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் எச்சரித்தார். ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வுக் காக வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டா லின், அண்மையில் உடல் நலக்குறை வால் காலமான திமுக முன்னாள் எம்.பி. இரா. மோகனின் குடும்பத்தினரை, கோவையில் வெள்ளிக்கிழமையன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இந்நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர் களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கோவை மாவட்டத்தில் திமுக-வின் தூணாக விளங்கியவர் இரா. மோகன். சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடா ளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு” என்று தெரி வித்தார். 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! மேலும், “ஈரோடு மாவட்டத்தில் கள  ஆய்வு நடத்தியுள்ளேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேக மான வகையில் உற்சாகமாக பணி யாற்ற உதவுகிறது. ஈரோட்டின் கள ஆய்வுக்கு பின்பு,  வரக்கூடிய 2026  சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதி கள் என்ற இலக்கினைத் தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கை யை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி  அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம்.  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஒரு  கொடுமையான சட்டம். ஜனநாய கத்தை படுகுழியில் தள்ளும் மோச மான செயல். அம்பேத்கர் அவமதிக்கப் பட்ட விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.  ‘நடிகர்கள் அரசியலுக்கு வரு வதை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றாக பார்க்கிறேன்” என சிரித்தபடி பதிலளித்துச் சென்றார்.