tamilnadu

பொள்ளாச்சி : கால்வாய் பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி, ஆக. 31- பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி கால் வாய் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியிலிருந்து பிரிந்து செல்லும் சாலைக ளில் போடிபாளைய சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பிஏபி கால்வாய் பாலமானது குறுகலாக உள்ளதால், இந்த வழியாக வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்து வருகிறது. ஆகவே, இந்த கால்வாய் பாலத்தை அகலப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.