புதுதில்லி, மார்ச் 21- கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக சோப்பு மற்றும் கை கழுவும் திரவத்தின் விலையை 15 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்துஸ்தான் யுனிலிவர் லிமி டெட், கோத்ரேஜ், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் தங்கள் தயா ரிப்பு சோப்புகள், இதர தூய்மைப் பொருட்களின் விலையை குறைப்பதாகவும் அதே நேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறு வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது தயாரிப்பு சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள், தரை துடைக்கும் திரவங்கள் ஆகியவற்றின் விலையை 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். விலை குறைக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் அடுத்த சில வாரங்களில் கிடைக்கும். ஏழை மக்களுக்கு 2 கோடி சோப்புகள் வழங்க முடிவு செய்துள் ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.