tamilnadu

img

இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலி நாட்டு உயரிய விருது

புவனேஸ்வர்,நவ.3- ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு இத்தாலியின் உயரிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது.  மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவ்வப் போது நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்சனைகள், சமூக பிரச்சனை கள், தலைவர்களின் பிறந்த நாள்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணல்  சிற்பங்களை படைத்து வருகிறார்.  இவர் உருவாக்கிய சிற்பங்கள் இந்திய அளவிலும், உலக அள விலும் பாராட்டைப் பெற்றுள்ளன. இந்நிலையில், மணல் சிற்பக் கலையில் சுதர்சன் பட்நாய க்கின் திறமையை பாராட்டி இத்தாலியின் உயரிய ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ இவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர்  13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இத்தாலி யில் நடைபெறும் சர்வதேச மணல் சிற்பத் திருவிழாவில்   சுதர்சன் பட்நாயக்கிற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.