tamilnadu

img

‘பாபா சாகேப்’ அம்பேத்கருக்கு 450 அடி உயர வெண்கல சிலை!

மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித் பவார் அறிவிப்பு

மும்பை, ஜன.16- இந்திய அரசியலமைப்பு சட் டத்தின் தந்தை டாக்டர் அம்பேத் கருக்கு, 450 அடி உயரத்திற்கு, பிரம்மாண்ட வெண்கலச் சிலை நிறுவ, மகாராஷ்டிர மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மும்பை தாதர் பகுதியில் உள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில், அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். சிலை நிறுவுவதற்காக முத லில் ரூ. 763 கோடி ரூபாய் மதிப் பீடு செய்த மகாராஷ்டிரா அரசு இப்போது அந்த தொகையை ரூ.1,069 கோடியாக உயர்த்தி யுள்ளது. சிலை மட்டுமன்றி, அம்பேத்கர் நினைவகம், அத னையொட்டி பூங்கா ஆகியவை யும் அமைகின்றன. மகாராஷ்டிராவில் அம்பேத் கருக்கு பிரம்மாண்ட முறையில் சிலை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிர தமர் மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு கடந்த 5 ஆண்டு களாக சிலை நிறுவுவதற்கான பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், இப்போது அந்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அம்பேத்கருக்கு சிலை நிறுவும் விவகாரத்தில் மோடி யின் அறிவிப்பைக் கூட பட்னா விஸ் அரசு நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், ஆனால் மோடி யின் அறிவிப்பை தாங்கள் செயல் படுத்துவதாகவும் சிவசேனா கட்சியினர் கூறியுள்ளனர்.

;