tamilnadu

img

சர்வதேச ஆவணப்பட விழா புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது

புதுச்சேரி,பிப்.20- புதுச்சேரியில் 9 ஆவது சர்வதேச ஆவணபட குறும்பட திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.21) துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாக்குழு தலைவரும், புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராமச்சந்தி ரன், தமிழகம் புதுச்சேரி திரைஇயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணு ஊடக வெகுஜன தொடர் பியல் துறை, மும்பைமத்திய அரசின் திரைப்பட பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கலை ஞர்கள் சங்கம், புதுச்சேரி திரை இயக்கம் இணைந்து 9 ஆவது சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்.21) துவங்கி 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவகர்லால்நேரு அரங்கில் நடை பெறகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழாவை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் திரைப்படத்துறை எடிட்டர் லெனின், மத்திய அரசின் மும்பை திரைப்பட பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனில் குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் கவுரவத் தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன், இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இத்திரைப்பட விழாவில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெ ரிக்கா, சிரியா, சீனா, இலங்கை, பிரேசில் ஆகிய நாடுகளின் படங்க ளும், மும்பை திரைப்படவிழாவில் விருது பெற்ற படங்களும், பல்கலைக் கழக மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்படு கின்றன.  தமிழகம், புதுவையை சேர்ந்த இளம் இயக்குநர்களின் ஆவணப் படம் மற்றும் குறும்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு பேசும் 41 படங்கள் திரையிடப்படுகின்றன.  இதற்கான ஏற்பாடுகளை தமுஎகச புதுச்சேரிநிர்வாகிகளும், பல்கலைக்கழக மின்னணு ஊடக பிரிவு பேராசிரியர்கள் மற்றும் மாண வர்களும் செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்கள். முன்னதாக விழாவில் வெளி யிடப்படும் திரைப்படகுறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப் பட்டது.  இந்த செய்தியாளர் சந்திப்பில் புதுச்சேரி முஎகச நிர்வாகிகள் அரி கிருஷ்ணன், உமா, கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் உடனி ருந்தனர்.