புதுச்சேரி, செப். 19- புதுவை அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள் இயக்கப் படாததால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். 3 மாத ஊதியத் தொகையை உடனே வழங்க வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு அறிவித்த தீபா வளி போனசை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி புதுச்சேரி அர சின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் இம் மாதம் 17ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் பிற மாநி லங்களுக்கு செல்லும் பயணி களில் பெரும்பாலானோர் பி.ஆர். டி.சி. பேருந்துகளில் செல்வ தையே அதிக அளவில் விரும்பு வார்கள். அதுபோல் தனியார் பேருந்துகள் செல்லாத புதுச்சேரி கிராமப்புறங்களுக்கு, பிஆர்டிசி பேருந்துகள்தான் சென்று வருகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வி புதுச்சேரி வட்டார போக்கு வரத்து துறை அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை யில், போக்குவரத்து ஆணையர், சாலை போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் ரூ.11 ஆயிரத்தை உடனே வழங்குவ தாக அமைச்சர் உறுதியளித்த துடன், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்த அமைச்சரவையில் முடிவு செய் யப்படும் என்றார். ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாத காலத்திற்குள் தினக்கூலி ஊழியர்களாக மாற்றப்படு வார்கள் என்று கூறினார். இதற்கு தொழிற்சங்க நிர்வாகி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த தோடு, ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து, அமைச்சர் ஷாஜகான் இக்கூட்டத்திலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து எந்த முடி வையும் அரசு தரப்பில் உறுதி யாக தெரிவிக்காததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவ டைந்தது. இதனால், ஊழியர்கள் வியாழன்றும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக பி.ஆர்.டி.சி பேருந்துகள் இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.