tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : பிரபஞ்சன் நினைவு நாள்...

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’ பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.1995ல் இவரது வரலாற்றுப் புதினம் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது.  இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.மிகச் சிறந்த எழுத்தாளரான பிரபஞ்சன் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் நாள் மறைந்தார்.

=== பெரணமல்லூர் சேகரன்===

;