புதுக்கோட்டை, பிப்.11- மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தேர்த லில் அதிமுகவினரின் சதிச்செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். புதுக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து மாவட்ட ஊராட்சிக்குழுவின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மவாட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். துணை தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கி யதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் திமுக விற்கு வாக்களிக்காமல் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சை கேட்டு அ.தி.மு.க.வுக்கு வாக்க ளித்து கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல் பட்டதை கண்டித்து தி.மு.க.வை சேர்ந்த 11 உறுப்பினர்களும் கூட்டத்தை புறக்க ணித்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் கூறுகையில், மாவட்ட ஊராட்சியில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற் றும், அமைச்சர் விஜயபாஸ்கரின் சூழ்ச்சி யால் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேரும் கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவிற்கு வாக்களித்து விட்டனர். இது ஜனநாயக விரோதமானது. நாங்கள் அமைச்சர் விஜய பாஸ்கரை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை மீறி வாக்களித்த காங்கிரஸ் உறுப்பினர் களை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம். தற்போதுகூட எங்களிடம் தான் அதிக உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நடை பெற்ற முதல் கூட்டத்தை புறக்கணித்தோம் என்றனர்.