tamilnadu

குன்றாண்டார்கோவில் ஒன்றிய மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து சிபிஎம் நடைபயணம்

நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குடவரைக் கோ விலை தலைமையிடமாகக் கொண்டு குன்றாண்டார்கோவில் ஒன்றியம் இயங்கி வருகிறது. 37 ஊராட்சிகளையும், 242 குக்கிரா மங்களையும் உள்ளடக்கிய குன்றாண்டார்கோ வில் ஒன்றியத்தில் மக்களின் வாழ்நிலை சமீப காலமாக மிக மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டு வருகிறது.
ஏழ்மையிலேயே வாழ்க்கை
விவசாயம் முற்றிலுமாக அழிந்து விட்ட நிலை யில் கட்டிடத் தொழிலாளியாக, சிறுகடை ஊழி யர்களாக வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர். படித்த இளைஞர்கள் வெளி மாவட்டத்திற் கும், சிலர் வெளி நாடுகளுக்கும் பிழைப்புக்காக சென்றுள்ளனர். கிடைக்கும் வருமானம், குடும்பத் தேவையையே பூர்த்தி செய்யாத நிலை யில் குழந்தைகளின் கல்வி மற்றும் இதரச் செலவுகளை செய்ய முடியாமல் மக்கள் கையறு  நிலையில் உள்ளனர். பல குடும்பங்கள் கடன் வலையில் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குடிமனைப் பட்டா
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் புறம்போக்கில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மனைப்பட்டா கேட்டு பல முறை மனுக் கொடுத்தும், போராட்டம் நடத்தி யும் பலருக்கு இதுவரை பட்டா கிடைக்க வில்லை. குடிசையில் வாழும் இவர்களுக்கு பட்டா இல்லாததால் அரசின் இலவச வீடு பெறமுடியாமல் தவித்துவருகின்றனர்.  இந்நிலையில் தான், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கிடைக்கும் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இங்கு கிடைக்கும் உலகத் தரமான கிரானைட் கற்களைக் கொண்டு அரசு கிரானைட் தொழிற்சாலையை நிறுவி இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். குன்றாண்டார் கோவில் நால்ரோட்டை மையப்படுத்தி அரசு கலைக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். சுத்தமான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்கின்ற மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணப் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று (நவ.24) தொடங்குகிறது. கிள்ளுக்கோட்டை, மின்னாத்தூர், அண்டக்குளம் ஆகிய மையங்களில் இருந்து கீரனூரை நோக்கிய இந்த நடைபயணப் பிரச்சா ரத்தில் கட்சி மற்றும் வெகுஜன அரங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகின்ற இந்த பிரச்சாரப் பயணத்திற்கு பொதுமக்கள் பேராத ரவு தருவதோடு, நடைபயண இயக்கத்திலும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.  

ஏ.ஸ்ரீதர்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர், புதுக்கோட்டை