திருவள்ளூர், ஆக. 18- கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் தேசிய கொடி ஏற்ற அனு மதி மறுத்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் எழில் தாக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப் பாக்கம் ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவரை, தேசிய கொடி ஏற்றவிடாமல் சாதி ஆதிக்க சக்தி யினர் தடுத்து வருகின்றனர். ஊராட்சி தலைவரை அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லை. நாற்காலியில் அமர கூடாது. நூறு நாள் வேலையை பார்வையிட கூடாது, ஊராட்சி கணக்கு வழக்குகள் பார்க்க கூடாது. கிராமசபை கூட்டத்தில் அனுமதியில்லை. ஊராட்சி மன்றம் கட்டிடத்தில் தலைவர் பெயரை எழுத அனுமதியில்லை என சாதி ஆதிக்க சக்திகள் அராஜகம் புரிந்து வருகின்றனர். இதுகுறித்து செய்தி கடந்த திங்கட்கிழமை (ஆக. 18) தீக்கதிரில் வெளியானது.
இது தொடர்பாக அந்த ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் எழில் செய்தி சேகரிக்க சென்றுள் ளார். அப்போது ஊராட்சி துணைத் தலைவர் ரேவதியின் கணவர் விஜய குமாரும், ஊராட்சி செயலர் சசிக்குமாரும் எழிலை கடுமையாக தாக்கி செல்போனை பறித்துக் கொண்டனர். அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்று அடைத்து வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சென்று எழிலை மீட்டு கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு எழில் புகா ரின் பெயரில் காவல்துறையினர், சசி குமார், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதனிடையே சசி குமார் தரப்பில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணிதள பொறுப்பாளர்கள் மூலம் எழில் மீது பொய் புகார் கொடுத்தனர்.
ஊராட்சி தலைவர் புகார்
இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம், தனக்கு இழைக் கப்பட்ட வன்கொடுமைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், வட் டாட்சியர், பொன்னேரி கோட்டாட்சி யர் ஆகியோரிடம் புகார் அளித்தார். அவருடன் சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.துளசிநாராய ணன், வட்டச் செயலாளர் இ.ரஜேந்தி ரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. சூரிய பிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஜோசப், செய லாளர் சிவக்குமார் ஆகியோர் உட னிருந்தனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் துறை ரீதியான விசாரணை நடத்தினார்.
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
புதிய தலைமுறை செய்தியாளர் எழில் தாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை ஜனநாயக பூர்வமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள ஊராட்சி செயலர் மீது துறை ரீதியாகவும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கவுரியின் கணவர் அரி தாஸ், ஊராட்சி துணைத்தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் ஆகி யோர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்.
மற்றொரு ஊராட்சியிலும் கொடுமை
நேமலூர் ஊராட்சி மன்ற தலைவ ராக அருந்ததிய வகுப்பை சேர்ந்த வர் உள்ளார். அவரையும் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றவிடா மல், பிற்படுத்தப்பட்ட சமூகத் சேர்ந்த வார்டு உறுப்பினர் கொடியேற்றி உள்ளார். இது தொடர்பாக பாதிர் வேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். உள் ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை ஜனநாயக பூர்வமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்
செய்தியாளர் எழில் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்யவும், பத்திரிகை யாளர்களை பாதுகாப்புக்கென்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் கொண்டுவரவும் வலியுறுத்தி டியுஜே, சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
பத்திரிகைகளில் வந்த செய்தியை தாமாக முன்வந்து விசா ரணைக்கு ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் தலித் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்கப்படா தது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநில ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகி யோர் 2 வாரங்களுக்குள் விளக்க மளிக்க உத்தரவிட்டுள்ளது.