tamilnadu

img

10 ஆயிரம் பேருக்கு கருக்கலைப்பு: போலி பெண் மருத்துவர் கைது

திருவண்ணாமலை, அக்.19- 10 ஆயிரம் பேருக்கு கருக் கலைப்பு செய்த போலி பெண் மருத்து வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத் தில் பெண் சிசுக்கொலை நடப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரு வண்ணாமலை வேங்கிக்காலில் சொகுசு பங்களாவில் கருக்கலைப்பு மையம் நடத்திய போலி பெண் டாக்டர் ஆனந்தி(51) என்பவர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையொட்டி ஏற்க னவே 2 முறை கைதான ஆனந்தி தொடர்ந்து அதே வேலையில் ஈடுபட்ட தால் மூன்றாவது முறையாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ஜாமீனில் வந்த ஆனந்தி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி யில் தங்கி கருக்கலைப் பில் ஈடு பட்டார். தகவலறிந்து போலீசார் சென்றபோது ஆனந்தி தப்பியோடி விட்டார். பின்னர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் பதுங்கிய ஆனந்தி யை போலீசார் வெள்ளியன்று நான்கா வது முறையாக கைது செய்தனர். ஆனந்திக்கு உடந்தையாக இருந்த நவீன்குமார்(20) என்பவரை கைது செய்தனர். ஆனந்தி, நவீன்குமாரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் சனிக்கிழமையன்று அதிகாலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 பேரை யும் வேலூர் சிறையில் அடைத்தனர்.