tamilnadu

img

கேனான் போலி டோனர்கள் பறிமுதல்

சென்னை, அக். 6- கோவை, ஈரோடு மாவட்டங்களில் சமீபத்தில் அறிவுச்சொத்துரிமை பிரிவினர் நடத்திய திடீர்சோதனையில் பிரபல கேனான் நிறுவனம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி டோனர்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். கணினி பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் இப்பொருட்கள் கேனான் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் இவை பறிமுதல் செய்யப்பட்டன. கோவை காந்தி புரத்தில் கடந்த 3 ஆம் தேதியும் ஈரோட்டில் 4 ஆம்தேதியும் இந்த சோதனை நடத்தப்பட்டது. காந்திபுரத்திலும், ஈரோட்டில் ஈவிஎன் சாலையிலும் 3 கடைகளில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டன. சிபிசிஐடி ஆய்வாளர் மதிவாணன் தலைமையிலான படையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த கடைக்காரர்களின் உரிமையாளர்கள் மீது காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.