tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தேஜஸ்விக்கு நிதீஷ்குமார் அழைப்பு!
பாட்னா:

“பயணங்களுக்கு பெயர்பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கொரோனா தனிமை மையங்களுக்கும் பயணம் செய்து நிலைமையை ஆய்வு செய்யலாம்” என்று மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ்கிண்டலாக கூறியிருந்தார். இந்நிலையில், “கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாகவே, தான் பயணம் செய்யவில்லை” என்றும், விதிகளை தளர்த்தும் போது,தேஜஸ்வி யாதவும் தன்னுடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் எனவும் நிதிஷ் பதிலளித்துள்ளார்.

ஆலங்கட்டி மழையிலும் நீண்ட வரிசை
நைனிடால்:

கொரோனா ஊரடங்குத் தளர்வுகள் காரணமாக, நாடு முழுவதும்மதுபானக் கடைகள்மீண்டும் திறக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் நகரில், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில்காத்திருந்து மதுபானங் களை வாங்கிச் சென்றுள் ளனர். நைனிடாலில், கடுமையான பனிப்பொழிவுடன், ஆலங்கட்டி மழை பெய்தது. ஆனாலும் மதுப்பிரியர்கள் அவற்றை சிறிதும் பொருட்படுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ம.பி. மாநிலத்தில் கஞ்சா கடைகளும்  திறப்பு
போபால்:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மதுபானம் மற்றும்கஞ்சா கடைகளை, காலை7 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்து, விற்பனை செய்வதற்கு, அம்மாநில பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதே
போல, மதுபானக் கடைகளை திறந்துள்ள பஞ்சாப்மாநில காங்கிரஸ் அரசு,ஆர்டர் செய்தால் மதுபானங்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யத் தயார் என்று அறிவித்துள்ளது.

ரூ.50 ஆயிரத்தை பறிகொடுத்த பாஜக எம்.பி.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத் தில் உள்ள போக்ரி பர்ஹாட் பகுதியில், அம்மாநிலபாஜக எம்.பி. ஆர்.கே.சிங் படேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு இரவுநேரத்தில் மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 பேர்தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பின்னர் அங்கிருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.