tamilnadu

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

உதகை, அக்.22- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உதகையில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியம் பொதுத்துறை யாகவே தொடர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று உதகையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நீலகிரி கிளை தலைவர் சி.வெள்ளகுட்டி தலைமை வகித்தார். சிஐடியு சங்கத்தின் மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணை தலைவர் ஜே.ஆல்தொரை வாழ்த்தி பேசினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில செயலாளர் வி. மைகேல் சிறப்புரையாற்றினார்.முடிவில் கிளை பொருளாளர் சின்னு நன்றி கூறினார். இதில் 30 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.