கோபி, ஜூலை 30- கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள தூக் கநாயக்கன் பாளையம் வன சரகத்திற்குட்பட்ட பகுதிக ளில் யானை தந்தங்களைக் கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற் குட்பட்ட தூக்கநாயக்கன் பாளையம் வனச் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை மற்றும் புலி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கணக்கம்பாளையம் பிரிவில் தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலை மையில் வனத்துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்க ளில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வர்களை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்க ளிடம் இரண்டு யானை தந்தங்கள் இருப் பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தம் கடத்தி வந்த தொட்டகோம்பை மலை கிரா மத்தைச் சேர்ந்த பழனிச்சாமி(50), அந்தி யூர் அருகே உள்ள பூனாட்சியைச் சேர்ந்த அங்கப்பன்(54), ஆண்டவன்(47), கோவிந்த ராஜன்(41) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 5 அடி நீளமுள்ள இரண்டு யானை தந்தங்க ளையும், இரண்டு இருசக்கர வாகனங்களை யும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.