tamilnadu

வாரச்சந்தை திறப்பு

 சீர்காழி, மார்ச் 9- நாகை மாவட்டம் கொள் ளிடம் சின்னக்குத்தவக்கரை என்ற இடத்தில் கோபால சமுத்திரம் ஊராட்சி சார்பில் வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது. கொள்ளி டம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பானுசேகர் தலைமையேற்று சந்தையை துவக்கி வைத்து பேசினார். இந்த சந்தையால், கொள்ளிடம் ஆற்றின் கரை யையொட்டியுள்ள குத்தவக் கரை, சரஸ்வதிவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரி டப்படுகிற காய்கறிகளை விற்பனை செய்வதற்கு தோட்டப் பயிர் விவசாயிகள் சிரமம் அடைந்து வரு கின்றனர்.  அவர்களின் சிரமங்க ளைப் போக்கும் வகையில் அருகிலேயே துவக்கப் பட்டுள்ள இந்த சந்தையில் விவசாயிகள், இடைத்தர கர்களின் தலையீடின்றி எளிதில் தங்களின் காய் கறி மற்றும் கீரை போன்ற வைகளை விற்பனை செய்து கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வசந்தி ராஜேந்தி ரன், வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சம்மந்தம், கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.