tamilnadu

வாய்க்காலை தூர்வாரிய குமாரகுடி கிராம மக்கள் உரிய தொகையை பொதுப்பணித்துறை வழங்க வலியுறுத்தல்

சீர்காழி, ஆக.20- நாகை மாவட்டம் சீர்காழி அருகே குமாரகுடி கிராமத்தில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் இருந்து கீழகளம்  என்ற இடத்தில் பாசன கிளை வா ய்க்கால் பிரிந்து 1.5 கிலோமீட்டர் தூரம்  சென்று 50 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்துவிட்டு மீண்டும் தெற்கு ராஜன் வாய்க்காலில் இந்த கிளை வாய்க்கால் சென்று கலக்கிறது. வருடந்தோறும் இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறை சார்பில் தூர்வா ருவது கிடையாது. இதனால் கிராம  மக்கள் ஒன்று சேர்ந்து இந்த வாய்க்கா லை தூர்வாரி வருகின்றனர். இந்த வாய்க்காலை தூர் வாருவதற்கு இக்கி ராம மக்கள் சார்பில் வருடந்தோறும் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்படு கிறது.  இதுகுறித்து குமாரகுடி கிராமத்தைச்  சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொள்ளிடம் முன்னாள் ஒன்றிய செயலாளரும் விவசாயியுமான தனு ஷ்கோடி கூறுகையில், கிராம மக்கள்  சார்பில் செலவிடப்பட்டுள்ள தொகையை பொதுப்பணித்துறை சார்பில் உடனடியாக வழங்காவிட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி கொள்ளி டம் பொதுப்பணித்துறை அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.