tamilnadu

img

எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி விழா

சீர்காழி, அக்.8- நாகை மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளியில் 11வது ஆண்டாக நவ ராத்திரி விழா நடைபெற்றது. விழாவினை யொட்டி பள்ளியில் கொலு வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் தாங்களாகவே முன்வந்து அளித்த எல்லா வகையான பொம்மைகளை யும் கொலுவில் வைத்தனர். இதில் திரு வள்ளுவர், புத்தர், ஏசுநாதர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் போன்றவர்களின் சிலையும் கொலுவில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  விழா முடிந்த பின் அந்தந்த மாணவ, மாணவிகள் அவர்கள் அளித்த பொம்மை களை திரும்ப எடுத்துச் செல்வது நடைமுறை யில் உள்ளது. ஆசிரியர்கள் விழாவின்போது குழுவாகப் பிரிந்து சுண்டல், பயிறு வகைகள் போன்ற தானியங்களை வழங்கினர். கொலு நாட்களில் ஆசிரியர்கள் மாலை 5 மணிக்கு ஒன்று கூடி விழாவினைக் மகிழ்வாக நடத்தி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் தங்கவேலு, முதல்வர் தங்கதுரை மற்றும் துணை முதல்வர்கள் மாதவன், கிரிஜா பாய், உஷா, ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியை ஸ்ரீவித்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.