tamilnadu

3 பேர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை  

தென்காசி, பிப்.29- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிதாய் மகளை முத்துராஜ் என்ற ஆண்டவர் கேலி செய்ததாக கூறி போலீசாரிடம் புகார் தெரிவித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில், ஆண்டவர் குடிபோதையில் வந்து பேச்சித்தாய், மகள் மாரி மற்றும் தந்தை கோவிந்தசாமி ஆகிய மூவரை கடந்த 2016 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கு வெள்ளியன்று தென்காசி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், குற்றவாளியான முத்துராஜ் என்ற ஆண்டவர்(36)-க்கு தூக்கு தண்டனையும் 2 வருடம் சிறைத் தண்டணையும் வழங்கி தீர்ப்பு அளித்தார்.