சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா
தூத்துக்குடி, மே 25- சென்னையில் இருந்து புங்கவர் நத்தம் கிராமத்திற்கு வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள புங்க வர் நத்தம் கிராமத்திற்கு சென்றையில் இருந்து வந்த 23 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் இருந்து புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆமைகளை கடத்த முயற்சி ஒருவர் கைது
தூத்துக்குடி, மே 25- தூத்துக்குடி வெள்ளப்பட்டி - தருவைகுளம் பகுதியில் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனச்சரக அலுவ லர் அருண்குமார், வனவர் ரெங்கநாத், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடு பட்டிருந்தபோது, தாம்போதி பாலத்தில் வல்லத்தில் இருந்து லோடு ஆட்டோவில் கடல் ஆமைகள் கடத்தப் படுவது தெரியவந்தது. வனத்துறை அதிகாரிகளை கண்ட தும் அங்கிருந்து சிலர் தப்பிச் சென்றுவிட்டனர். வேனை சோதனையிட்டபோது அதில் 5 ஆமைகள் உயிரு டன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லோடு வேன் ஓட்டு நர் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கணேசபுரத்தைச் சேர்ந்த குமார்(45) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 5 ஆமைகளும் கடலில் விடப்பட்டன. வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். ஆமைகள் கடத்தல் தொடர்பாக தருவைகுளத்தைச் சேர்ந்த தாமஸ், பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், வின்சென்ட் ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
தூத்துக்குடி, மே 25- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மறவர் கால னியைச் சேர்ந்தவர் செண்பகராஜ்(29). இவர் ஞாயிறன்று அப்பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந் ததால் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்ப டுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த செண்பகராஜ் உடல் பரி சோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாலிபர் கைது
தூத்துக்குடி, மே 25- தூத்துக்குடி தாளமுத்துநகர் பார்வதிநகரைச் சேர்ந்த வர் மந்திரமூர்த்தி மனைவி பிரேமா(35). இவருக்கும் எதிர்வீட் டில் வசிக்கும் சந்தனபால் மகன் சிவா (36) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று ஏற்பட்ட தகராறில் பிரமோவை சிவா அரிவாளால் வெட்டியுள் ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப் பதிந்து, சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.