tamilnadu

img

வேலம்பாளையத்தில் எரியாத தெரு விளக்குகள்

ஆறு மாதங்களாக கண்டுகொள்ளாத அவலம்

திருப்பூர், டிச. 9 – திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உட்பட்ட வேலம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலை யம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி அருகே கடந்த ஆறு மாதங்களாக தெரு விளக்கு பழு தான நிலையில் எரியாமல் உள் ளது. இது குறித்து தகவல் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மாநகராட்சி முதல் மண்டலத் துக்கு உட்பட்ட 15 வேலம்பாளை யம் பகுதி, முன்பு 15ஆவது வார் டாக இருந்தது. தற்போது வார்டு வரையறைக்குப் பின் புதிய 12 ஆவது வார்டாக வருகிறது. இந்த பகுதியில் வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அதன் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைந்துள் ளன. இதற்கு சற்று தொலைவில் வேலம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே இரண்டு தெரு விளக்குகள் கடந்த பல மாதங்க ளாக எரியாமல் பழுதடைந்துள் ளது. இது குறித்து மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் தெரிவித்தும், தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தப் பணியாளர்களிடம் சொல்லியும் மாதக்கணக்கில் எந்த நடவடிக் கையும் எடுக்காமல் இருக்கின்ற னர் என்று இப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சி.சுப்பி ரமணியம் என்பவர் தெரிவித்தார்.  இத்துடன் அம்மையப்பன் நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதியிலும் தெரு விளக்குகள் எரி யாமல் பல மாதங்களாக அப்பகுதி இருளில் உள்ளது. இதைப்  பற்றி யும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் தெரி வித்தனர். இதுதொடர்பாக, மண்டல உதவி பொறியாளரைத் தொடர்பு கொண்டபோது இதுவரை தனக்கு  புகார் எதுவும் வரவில்லை என்றும், இது குறித்து கவனிப்பதாகவும் கூறினார். பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் பயன்பாடு அதிகமுள்ள பகுதியில் தெரு விளக்கு எரியாதது குறித்து பல முறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்காமல் இருப்பது இப் பகுதி மக்களிடம் கடும் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கண்டுகொள்ளாத நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி நூதன முறையில் போராட்டம் நடத்த திட்டமிடப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரி வித்தனர்.