தூத்துக்குடி, ஜூலை 12- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோத னையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப் பட்டு உள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படு கிறது. அத்தியாவசிய பணிகளுக்கு செல் வோர் மட்டும் சென்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். தூத்துக்குடி நகரத்தில் மட்டும் 35 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி எட்டயபுரம் சாலை யில் புதிய பேருந்து நிலையம் அருகில் சோதனை பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண் டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து வரக்கூடிய மற்ற வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப் படும். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.