tamilnadu

தனியார் பள்ளி மாணவன் விபத்தில் பலி

திருவள்ளூர், பிப்.23-  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் பள்ளி சார்பில் ‘வைட்டமின் ‘டி’ அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  12 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியினை மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் போட்டியினை ஒருங்கிணைக்கும் பணி யில் பள்ளி மாணவர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று  ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில்  திருக்கண்ட லம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தனுஷ், பாலாஜி ஆகியோரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.