திருப்பூர், செப். 17 – தமிழகத்தில் சாதி ஒழிப்பு, பகுத்தறிவு கொள் கைகளை வாழ்நாள் முழுவ தும் பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாயன்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர். திருப்பூர் ரயில் நிலை யம் அருகில் உள்ள பெரி யார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர். குமார், மாவட்டச் செயலா ளர் ச.நந்தகோபால் உள் ளிட்டோர் மாலை அணி வத்து மரியாதை செய்தனர். பெரியாரியல் கூட்ட மைப்பு சார்பில், திருப்பூர் எம்ஜிஆர் சிலை அருகி லிருந்து ரயில்நிலையம் பெரியார் சிலை வரை ஊர் வலமாகச் சென்றனர். அப் போது பெரியார் புகைப் படத்துடன் கூடிய பதாகை களை தாங்கியபடி, முழக் கங்கள் எழுப்பப்பட்டன. தி.க மாவட்ட தலைவர் ஆறுமுகம், தி.வி.க மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, த.பெ.தி.க மாநகரத் தலை வர் சண்.முத்துகுமார் ஆகியோர் இணைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பெரியார் சிலை முன்பு உறுதிமொழி ஏற்றனர். பல்லடத்தில் நீலம் சட்ட மையம் செந்தில் குமார். விஜய்பிரதாப். முஸ்லீம் முன்னேற்ற கழகம் முஜிபூர் ரஹ்மான். தீண்டாமை ஒழிப்பு முன்னணி முருகசாமி, ஆர்.பரமசிவம், அஸ்ரப் அலி, சி.விஜயன் உள்ளிட் டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தனர். இதேபோல் நொய்யல் இலக்கிய வட்டம், தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உட்பட பல் வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொண் டாடப்பட்டது.
குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றி யம் கோட்டமங்கலம் சமத்துவபுரத்தில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ணணி சார்பில் பெரி யார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு முன்னணி யின் செயலாளர் வெ.ரங்க நாதன் தலைமைவகித்தார். இதில் தீண்டாமை, பெண்ணடிமை, மதவெறி, கொடுமைகளுக்கு எதிராக சமரசம் இன்றி போராட உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் சி.ஜெயப்பிரகாசம், புலவர் மு.வேங்கட சாமி, என்.சசிகலா, பெரியார்தாசன், ஓம்பி ரகாஷ் உட்பட திரளானனோர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்
த.பெ.தி.க.மாவட்ட செயலாளர் சு.சிவசங்கர் தலைமையில் மடத்து குளம் பகுதியில் உள்ள காரத்தொழுவு பகுதியில் தொடங்கிய பிரச்சார பயணம் கடத்தூர், கணியூர், மடத்துகுளம் மற்றும் குமரலிங்கம் பகுதிகளில் நடைபெற்றது. பின்னர் உடுமலை பகுதியில் உள்ள பாலப்பம்பட்டி பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெதபம்பட்டி, குடிமங்கலம், பூளவாடி உடுமலை மத்திய பேருந்து நிலை யம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் பிரவீன்குமார், யாழ் நடராஜன், இராமகிருஷ்ணன், திருமூர்த்தி, ஜே,கே.ரமேஷ், மயில்சாமி உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலை வட்ட முற்போக்காளர்கள் கூட்டமைப்பின் சார்பில் உடுமலை அருகே பாலப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபு ரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் உடுமலை நகரில் உள்ள யுஎஸ்எஸ் காலணி, சிவ சக்கதி காலனி, கொல்லன் பட்டறை, தங்க மாள் ஓடை வீதி ஆகிய பகுதிகளில் சாதி, மத எதிர்ப்பு வாகன பிரச்சாரம் நடை பெற்று காந்தி சதுக்கம் பகுதியில் நிறை வடைந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜா.சாதிக் பாட்சா தலைமை தாங்கினார். மடத்துகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் விடுதலைமணி, ஜக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூர்த்தி, ஆதிதமிழர் பேரவை யின் பெரியார்தாசன், திராவிடர் கழகத்தின் தம்பி பிரபாகரன் மற்றும் மோகன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி
அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட முத்து செட்டிபாளையத்தில் துணை சுகாதார நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், திமுக சார்பில் தந்தை பெரி யார் திருவுருவ படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. வாலி பர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய நிர்வாகி கள் பன்னீர், வடிவேல், திமுக அவிநாசி நகர நிர்வாகி பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், அவிநாசி அருகே சேவூர் கைகாட்டி ரவுண்டானாப் பகுதியில் ஆதித்த மிழர் பேரவை சார்பில் பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஆதித் தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் க.மணி தலைமை வகித்தார். திமுக சேவூர் ஊராட்சி செயலாளர் க.பால்ராஜ், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் அர.விடுதலை செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் இரா.நடராஜன், பெ.பிரமேஷ், ப.யுவராஜ், க.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.