tamilnadu

img

தொலைபேசி வாயிலாக குறைகேட்ட ஆட்சியர்

திருப்பூர், ஆக. 3 – திருப்பூர் மாவட்டத்தில் வாரந்திரக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தொலைபேசி வாயி லாக நடத்தி, பொதுமக்களி டம் குறைகளைக் கேட்ட றிந்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாரந்தோறும் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க் கூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் பொது மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தால் அதை பெறுவ தற்காக, ஆட்சியரக நுழை வாயிலில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் பெறப்படும் மனுக்கள் தீர்வு காண அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் அதி கரிக்கும் சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யரக அலுவலகத்திற்கு மக்கள் வராத பொருட்டு தொலைபேசி வாயிலாக மக்கள் குறை தீர்க்கும் சிறப்புக் கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இதன் அடிப்படையில் தொலைபேசி வாயிலாக பொது மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சி யர் விஜயகார்த்திகேயன், அதன்மீது உரிய நடவ டிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார். அதில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்டன. மொத்தம் 95 அழைப்புகள் வரப்பெற் றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.