உடுமலை, அக். 3- கம்யூனிச இயக்கத்தின் நூற் றாண்டு, மகாத்மா காந்தி 150 ஆண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் பொதுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் புதனன்று குரல்குட்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் பேசுகையில், இந்த உலகத்தில் நடுநிலை என்ற நிலைப்பாடு ஒன்று இல்லை. எனவே தான் எங்களின் தீக்கதிர் நாளிதழில் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும், மக்கள் தினமும் சந்திக்கும் பல்வேறு பிரச் சனைகளை எவ்வித விளம்பர நோக்கம் இல்லாமல் தொடர்ச்சி யாக செய்தியாக வெளியிட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் தேச தந்தை காந்தி கொல்கத்தா நகரில் உள்ள நவகாளி யில் கலவரம் நடைபெற்ற வீதிகளில் மெளனமாக சுற்றி வந்தார். அதே நிலைமையை ஆட்சியாளர்கள் மதத்தின் பெயரில் மீண்டும் ஒரு நவகாளியை கொண்டு வர துடிக்கி றது. நாடு சுதந்திரம் அடைந்த போது மதத்தின் பெயரில், அதே மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட காந்தி கொல்லப்பட்டதை நாம் மறக்க முடியாது. மதம் மக்களின் மனதில் மட்டும் இருக்க வேண்டியதை, சிலர் தங்களு டைய அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதற்கு உதாரணமாக மக்களைவை சபா நாயகர் சில வாரங்களுக்கு முன்பு ஜாதி அடிப்படையில் மக்களின் குணங்கள் உள்ளது என்ற பேச்சு உள்ளது. ஆட்சியாளர்கள் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாமல், தனியார் நலனுக்காக பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறார் கள். இதனால் தற்போது சிறுகுறு தொழில்கள் மற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியால் மூடப்பட்டு உள் ளது. மக்கள் ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க முடியாமல் போன தால் பார்லே உள்ளிட்ட பிரபல பிஸ் கட் நிறுவனங்கள் மூடப்பட்டு உள் ளது. மத்திய ரிசர்வ் வங்கி முதல் மக் கள் வாங்கும் சக்தி வரை அனைத்தும் பாதிக்கப்பட்டதால் நாட்டின் பொரு ளாதார சங்கிலி ஆட்சியாளர்களின் தவறான பொருளாதர கொள்கை யால் அறுத்து எறியப்பட்டு உள் ளது. மத்திய ஆட்சியாளர்கள் சொல் லும் வளர்ச்சி என்பது அரசு துறை களை தனியாருக்கு மாற்றும் நட வடிக்கையால் மக்களுக்கு சேவை துறையாக உள்ள கல்வி, சுகாதாரம், குடிநீர் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இதுபோன்ற மக்கள் விரோதமாக நடைபெறும் அரசுக ளின் நடவடிக்கையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய எங்க ளுக்கு காவல்துறையின் மூலம் அனுமதி மறுக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை எந்த வித கட்டுப் பாடுகள் போட்டும் தடுக்க முடி யாது. அதேபோல் மக்களுக்காக போராட்டம் நடத்தும், எங்களை யும் எந்த விதத்திலும் தடுக்க முடி யாது தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இந்தியாவில் இந்துத்துவா மனி தாக இல்லாமல், அனைத்து மக்க ளையும் நேசிக்கும் மனித நேயமிக்க மனிதனாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார். இப்பொதுக்கூட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல் குட்டை வடக்குகிளை செயலாளர் செல்லமுத்து தலைமை தாங்கி னார். தெற்கு கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலதண்டபாணி, ராஜகோபால், ஜெகதீசன், பழனி சாமி, ரங்கராஜ் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். நிறை வாக மகேந்திரன் நன்றி கூறினார்.