tamilnadu

தீராத குப்பை பிரச்சனை: திணறும் டாலர் நகரம்!

பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியா வின் தலைநகரமாகத் திகழும் திருப்பூர் மாநகரம் குப்பைப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் பல ஆண்டு காலமாகத் திணறி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வரும் அரசு நிர்வாகம், அடிப்படைத் தேவை யான குப்பைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் திறனில்லாமல் இருக்கிறது. சிறு நகரமாக இருந்த திருப்பூர் 1985ல்  ரூ.10 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்தது, 1990 காலகட்டத்தில் ஆயிரம் கோடியில் காலடி எடுத்து வைத்த இந்த  நகரம் தற்போது 2019 - 20ஆம் நிதி யாண்டில் ரூ.27 ஆயிரம் கோடிக்கு மேல்  ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. அதே போல் உள்நாட்டு உற்பத்தியும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் நடைபெறுகிறது.

கடந்த 40  ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட்டது. இதனால் குறு கிய காலத்தில் இந்நகரம் விரைவாக விரிவ டைந்தது. ஒரு லட்சம் பேர் வசித்து வந்த நக ரம் தற்போது சுமார் 8 லட்சம் பேர் வசிக்கும் மாநகரமாக பெருத்துவிட்டது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

இந்த காலத்தில் மக்கள்தொகையும், குடியி ருப்புகளும் பெருகிய அளவுக்கு குடிநீர்,  சாக்கடை வடிகால், குப்பை அகற்றம்  உள்ளிட்ட பிரச்சனைகளும் அதிகரித்து ள்ளன.3 குடிநீர் திட்டங்கள் போதா மல், 4ஆவது குடிநீர் திட்டம் தற்போது  ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திடக் கழிவு மேலாண்மை எனப்படும் குப்பை  அகற்றத்திற்கு எவ்விதமான தொலைநோக் குத் திட்டமும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கோயில்வழியில் அமைக்கப்பட்டது.

நகரில் அப்போது சேகரமான 100 டன் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை  எனப் பிரித்து எடுத்து, உரம் தயாரிக்கும் இந்த ஆலை தோல்வியில் முடிந்தது. அதன்  பிறகு இதுவரை உருப்படியான திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நகரில் உருவாகும்  குப்பை அளவு பாய்ச்சல் வேகத் தில் அதிகரித்து தற்போது 600 டன் னுக்கு மேல் குப்பை உருவாகிறது. 20 ஆண்டுகளில் ஆறு மடங்கு குப்பை அதிக ரித்தும், அதை அகற்றுவதற்கான வழி வகையை மாநகராட்சி நிர்வாகம் கண்ட றியவில்லை, மத்திய, மாநல அரசுகளும் இதைப் பற்றி பார்வையில்லாமல் இருக் கின்றனர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் சீர்மிகு நகரமாக மாற்றுவதாக, மக்களுக்குச் சம்பந்தமில்லாத பல வேலைகளைச் செய்து  வருகின்றனர். குப்பை சேகரித்துக் கொட்டு வதற்கு தற்போதுள்ள நிலை, நகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இருக்கும் பாறைக்குழிகளில் கொட்டுவது மட்டுமே! ஆனால் பாறைக்குழிகள் நிரம்பிய பிறகு  அங்கு மேலும் கொட்ட முடியாது. புதிய பாறைக்குழிகளைத் தேடி அங்கு குப்பை கொட்டச் சென்றாலும், சுற்றுச்சூழல் குறித்த  விழிப்புணர்வு காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். தொலைநோக்குத் திட்டமோ, மாற்று  வழியோ இல்லாத நிலையில் மாநக ராட்சி நிர்வாகம் வாரக்கணக்கில் குடியி ருப்புகளில் குப்பைகளை அள்ளாமல் அப்ப டியே கிடப்பில் போட்டு  வைத்து விடுகி றது.

எனவே நகரமே நாறிக் கிடக்கிறது.  திருப்பூரின் திடக்கழிவு மேலாண் மைக்கு, இடுவாய் ஊராட்சியில் மாநக ராட்சிக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில்  நவீன முறையில் திடக்கழிவு கிடங்கு அமைத்து அழிக்கப்படும் என்று கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம் அறி வித்து வந்தது. ஆனால் அது வெறும் வாய்மொழியாகவும், பேப்பரில் எழுதி வைக் கப்பட்டதாகவும் மட்டுமே இருந்தது. தற்போது அங்கும் மாற்றுப் பணிகள் நடை பெறுவதால் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

உள்ளூர் மக்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போதும் திருப்பூர் குப்பை மாநகரமாகக் காட்சியளிக்கிறது. மாநகரில் உற்பத்தியாகும் குப்பை அள வைக் கட்டுப்படுத்தவும், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வாங்கவும், குப்பையை சேகரித்து அதை பயனுள்ள முறையில் மாற்றிப் பயன்படுத்தவும், மக்காத குப்பையை அழிக்கவும் என எந்த திட்டமும் நிர்வாகத்திடம் இல்லை.

திடக்கழிவு மேலாண்மை பற்றி நாட்டின் மற்ற தொழில் நகரங்களில் எத்த கைய வழிமுறை பின்பற்றப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, ஆய்வு செய்யவும், இந்த நகருக்குப் பொருத்தமான முறையை உருவாக்கவும் மாநகராட்சி நிர்வாகம் மட்டு மல்ல, தமிழக அரசும் அக்கறையுடன் நேரடி யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்நியச் செலாவணி, வேலை வாய்ப்பு தரும் நகரம் என ஆட்சியாளர்கள் திருப்பூரை வெறும் வாயளவில் புகழ்ந்து பேசி னால் மட்டும் போதாது, இந்த நகரின் சுகா தார நிலை காக்கவும், தொற்று நோய்த் தாக்குதலில் இருந்து மக்களைப் பாது காக்கவும், உண்மையிலேயே தூய்மை யான சீர்மிகு நகரமாக மாற்றவும் உருப்படி யான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார் க்கின்றனர்.        

(ந.நி)