திருநெல்வேலி, மே 26- நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை நீண்ட கால ஊரடங்கிற்கு பின்பு, தமிழக அரசு, சுகாதாரத்துறை மற்றும் இந்திய கண் மருத்துவ சங்கத் தின் அறிவுரைகளை நடைமுறைபடுத்தி கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகி ச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகர்வால் கண் மருத்து வமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைக்கு வரும் பயனா ளிகளை உறுதிப்படுத்தும் பொருட்டு வழிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய பட்டுள்ளது. அனைத்து பணியாளர்க ளும் துறை ரீதியாக வகைப்படுத்தப் பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ப்பட்டுள்ளன. மேலும் மருத்துவம னைக்கு வரும் மருத்துவர்கள், ஊழி யர்கள், பயனாளிகள் மற்றும் உட னிருப்பாளர்கள் அனைவருக்கும் நுழைவு வாயில் பகுதியில் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது.
இருமல், சளி, மூச்சுத்திணறல் ஏதே னும் இருந்தால் அவர்களுக்கு பிரத்யேக மாக ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் கண் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, கொரோனா அறிகுறி சிகிச்சைக்காக அருகில் உள்ள ஏதேனும் மருத்துவம னைக்கு வைக்கப்படுவார்கள். விருப்ப த்தின் அறிவுரைப்படி குறிப்பிட்ட இடை வெளியில் கிருமிநாசினி மூலம் மருத்து வமனை முழுவதும் சுத்தம் செய்யப்படு கிறது. பயனாளிகளின் இருக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஒவ்வொரு நோயாளியின் இடைவெளி யில் சுத்தம் செய்யப்படுகிறது. அறிவுரை யின்படி மருத்துவமனைக்கு வரும் பய னாளிகள் மற்றும் உடனிருப்பவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.