திருச்சிராப்பள்ளி, நவ.8- 7வது ஊதியக்குழுவை அமல்படுத்தி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். டேங் சுத்தம் செய்ய மாதம் ரூ700 வழங்க வேண்டும். துப்புரவு பணியா ளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பணிக்கொடை 50,000 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் முசிறி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பால சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பழனிவேல் ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி ராஜா, மாவட்ட குழு முருகே சன், தொட்டியம் பெரியசாமி, தா.பேட்டை செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.