திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வில் 38 வெளிமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் செவ்வாயன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில செயலாளர் பன்னீர்செல்வம், திட்ட செயலாளர் செல்வராசு, டிஎன்பி இஓ மாநில துணைப் பொதுச்செயலா ளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். கோட்ட செயலாளர்கள் லால்குடி பழ னியாண்டி, துறையூர் ரவிச்சந்திரன், மணப்பாறை ரியாஜூதீன், திருச்சி கிழக்கு சார்லஸ், ஸ்ரீரங்கம் சுப்ரமணி யன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர கோட்ட செயலா ளர் நடராஜன் நன்றி கூறினார்.