தஞ்சாவூர், மே 22- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட இடங்களில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர் சி. ஜெயபால், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், ஐஎன்டியூசி மோகன்ராஜ், தொமுச கு.சேவியர், ஏஐசிசிடியூ ராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் தலைமை வகித்து கண்டன உரையாற்றினர்.
தஞ்சாவூர் பாலாஜி நகர் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். தஞ்சை விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு ஞானசேகரன், தஞ்சை புறநகர் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கோ விந்தராசு, தஞ்சை நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சை கீழவாசல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு சுமைப் பணி தொழி லாளர் சங்க தலைவர் த.முருகேசன், சாந்தி கமலா திரையரங்கம் அருகே உரிமைக்குரல் ஓட்டுனர் சங்கம் சிங்காரம், தஞ்சை மாநகர ஆட்டோ சங்கம் சிஐடியு எம்.சுரேஷ், தஞ்சை அரண்மனை அருகில் சிஐடியு வீட்டு வேலைப் பணியாளர் சங்கம் கே.கல்யாணி, தஞ்சை பாலாஜி நகரில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம் கண்டன உரையாற்றினார். பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டியில், உள்ளாட்சி ஊழியர் சங்கம் ஐ.இமானுவேல், திரு வையாறில் சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர் மாரியப்பன், பூதலூரில் சிஐடியு கட்டுமான சங்கம் இ.முகம்மது சுல்தான், மாரியம்மன் கோவிலில் சிஐடியு கட்டுமான சங்கம் ஈ.பி.எஸ்.மூர்த்தி ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூர் காட்டாத்திப்பட்டியில் உள்ளாட்சி ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மணிவேல் தலைமையிலும், திருமலைசமுத்திரம் பிகே மெடி எக்யூப்மென்ட் தொழிற்சாலை முன்பு ஜி. ராமலிங்கம் தலைமையிலும், செங்கிப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சிஐடியு சங்கம் என்.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் முருகேசன் தலைமையிலும், ஊரணிபுரத்தில் சிஐடியு கட்டுமான சங்கம் சின்னையன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றியத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள், சிஐடியு நிர்வாகி கோவிந்த ராசு தலைமையிலும், சோழபுரத்தில் சிஐடியு கட்டுமான சங்கத் தொழிலாளர்கள் தங்கராசு தலைமையிலும், திருபுவனத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சிஐடியு நிர்வாகி நாகேந்திரன், ஏஐடியுசி நிர்வாகி மணி மூர்த்தி தலைமையிலும், திருவிடைமருதூரில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் சா. ஜீவபாரதி தலை மையிலும், கும்பகோணம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பி.ஜேசுதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சிஐடியு நிர்வாகி பார்த்தசாரதி தலைமையிலும், மைதீன் புகையிலை தொழிலாளர் சங்கம் யூனிட் - 1 செந்தில், யூனிட்-2 கணேசன் தலைமையிலும், ஏஆர்ஆர் சீவல் தொழிலாளர் சங்கம் கமலம் தலைமை யிலும், கும்பகோணம் எஸ்இடிசி பணிமனை முன்பு சிஐடியு தலைவர் சாமிநாதன் தலைமை யிலும், கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு மணிமாறன் தலைமையிலும், தாராசுரம் எவர்சில்வர் தொழிலாளர்கள் சிஐடியு தலைவர் செல்வம் தலைமையிலும், திருச்சேறையில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் டி.என்.ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரியம்
கும்பகோணம் மின்வாரிய அலுவலகம் முன்பு காணிக்கைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மின்வாரிய மண்டலச் செய லாளர் அகஸ்டின் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாவட்ட பொருளாளர் ம.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் த.செங்குட்டுவன், கே.அன்பு, மாநிலக்குழு உறுப்பினர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சேகர், அரசுப் போக்குவரத்து கழக மத்திய சங்கத் தலைவர் முருகன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் கே.பாலமுருகன், விதொச மாநிலக்குழு சி.நாகராஜன், தரைக்கடை வியா பாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் ராம சாமி, திருநாவுக்கரசு, காரல் மார்க்ஸ் உள்ளிட் டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னர். சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, தொமுச, ஏஐசிசிடியூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பார்த்தசாரதி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எம். கண்ணன், ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் கே.செந்தில் குமார், நகரத் தலைவர் சாமிநாதன், நகரச் செயலாளர் கார்த்திகேயன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜேசுதாஸ், ஜெயராமன், ஏஆர்ஆர் தொழிற்சங்க குமார், கமலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
இதே போல் நாகப்பட்டினம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரி முத்து, தேசத்தின் நெருக்கடிகளையும் தொழிலா ளர்களுக்கு மத்திய- மாநில அரசுகள் இழைக்கும் கொடூரங்களையும் விளக்கிச் சிறப்புரையாற்றி னார். தொழிலாளர் முன்னேற்றச் சங்க மண்டலச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். நாகையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி தலைமையேற்றார். நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளர் சு.மணி சிறப்புரையாற்றினார். எம்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நாகை ஒன்றியம் சிக்கல் கடைத்தெருவில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.டி.பகு, பி.கே.ராஜேந்திரன், எஸ். என்.ஜீவாராமன், என்.வடிவேல், சு,சிவகுமார், சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.டி.பகு, எம்.பி.குண சேகரன், எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலா ளர் நலச் சட்டங்களைத் திருத்த முயலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அனைத்து அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள், மின்வாரிய அலுலவகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப் பாட்டங்களில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் ஏ.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், எம்.ஜியாவுதீன், சி.மாரிக்கண்ணு, தொமுச நிர்வாகி கள் கே.கணபதி, ரெத்தினம், எம்.வேலுச்சாமி, ஏஐடியுசி நிர்வாகிகள் வி.சிங்கமுத்து, கே.ஆர்.தர்மராஜன், வின்சென்ட், பணியாளர் சங்கம் சார்பில் ராஜசேகர் உள்ளிட்;ட ஏராளமான பங்கேற்றனர். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்;த்தனன் உள்ளிட்டோர் பேசினர்.
நீடாமங்கலம்
இதே போல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் கே.முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து வட்டச் செயலாளர் தங்க பாண்டி, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சின் னையன், செயலாளர் எஸ்.ஆறுமுகம் பேசினர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் தண்டபாணி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, ஹச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் சி.கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.சிட்டம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.