கோவை, நவ.13- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சூலூர் தாலுகா அமைப்புக் கூட்டம் புதனன்று நடைபெற்றது. கோவை இருகூர் டைனமோ கிளப்பில் நடை பெற்ற இக்கூட்டத்தில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் டி.சுதா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தாலுகா கமிட்டி தலைவராக கண்மணி, செயலா ளராக லலிதா மணி, பொருளாளராக சுசீலா மற்றும் ஏழு பேர் கொண்ட புதிய தாலுகா கமிட்டி அமைக் கப்பட்டது. முன்னதாக, சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் எம்ஆறுமுகம், விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.ஜோதிபாசு, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.