தருமபுரி, மார்ச்.5- தருமபுரியில் உள்ள சி.எஸ்.ஐ. மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை பள்ளியின் தாளாளர் பிரபு சந்திர மோகன் தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கவிதா ரோஸ்லின் பிரின்ஸ் தலைமை வகித்தார். இக்கண்காட்சியில் அறிவியல், கணிதம், கணினி அறிவியல், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், பொது அறிவு, சூரிய ஒளி மின்சார பயன்பாடு, நெகிழி குறித்த விழிப்புணர்வு, பெண் கல்வி விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மழைநீர்சேகரிப்பு, புவி வெப்பமாதல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல்- மாசு கட்டுப் பாடு, சிறுதானிய உணவு வகைகள், வேளாண்மை முக்கியத்துவம், மண்பாண்டங்களின் வகை மற்றும் பயன் பாடுகள் போன்ற பல்வேறு துறை சார்ந்த படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் நட ராஜன், மாவட்ட டேக்வாண்டோ தலைவர் சுதாகர் ஆகி யோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.