பொன்னமராவதி, ஜூலை 20- பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை, வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. பள்ளியின் இயக்கு நர் வ.சித.பழ.சிதம்பரம் தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் மா.சிதம்பரம் செஞ்சொற்கவியின்பம் எனும் தலைப்பில் பேசினார். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக முத்தமிழ்ப் பாசறை தலைவர் நெ.இரா.சந்திரன், பொருளாளர் சி.சு.முருகேசன், காவல் ஆய்வாளர் கருணாகரன், காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பாசறை செயலாளர் பெ.சதாசிவம், துணைத் தலைவர் கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் மாரிமுத்து, செம்பூதி கூட்டுறவு சங்கத் தலைவரும், கொப்பனாபட்டி சைன் லயன் சங்க தலைவருமான சிங்காரம், பேராசிரியர் கருப்பையா, பாசறை முன்னாள் தலைவர் நடராசன், அறங்காவலர்கள் காமராஜ், தட்சிணா மூர்த்தி, சந்திரன், முருகேசன், ராஜாமுகமது, முருகேசன், துணைத்தலைவர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் வீரப்பன், கணேசமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப ஒருங்கி ணைப்பாளர்கள் சிவபாலன், வெங்கடேசகுப்தா, பாசறை செயற்குழு உறுப்பினர் இளையராஜா பங்கேற்றனர். பள்ளி முதல்வர் முருகேசன் நன்றி கூறினார்.