tamilnadu

img

கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் உலகமுழுவதும் பரவி அதன் பாதிப்பால்  மக்கள் தங்கள் உயிர் ,அன்றாட வாழ்கை தரம் முதலியவற்றை இழந்து வரும் நிலையில், ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் ஒரு முறை தொற்று பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்புள்ளதாக  நிபுணர்கள் கூறுகின்றனர்.  

உலகம் முழுவதும் 23 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் தீவிர பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.  அந்நோயாளிகள் தங்கள் விடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் ஒரு முறை தொற்று பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறியது மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 30 வயதான நபருக்கு நான்கரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.