tamilnadu

img

8 மாத நிலுவைத் தொகையை வழங்கிட தொல்லியல் துறை ஊழியர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் அக்.5- தொல்லியல் துறை ஊழியர்க ளின் 8 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சையில் வெள்ளிக்கிழமை அன்று தொல்லியல் துறை தொழி லாளர்கள் சங்கம்(சிஐடியு) அமைப்புக் கூட்டம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு தஞ்சை மாவட்டச்  செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரை யாற்றினார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், ஒப்பந்த தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மருந்து விற்பனை பிரதிநிதி கள் சங்க மாவட்டத் தலைவர் முரு கேசன், இஞ்சினியரிங் சங்கத் தலைவர் வி.ராமலிங்கம் மற்றும் தொல்லியல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  கூட்டத்தில், “தொல்லியல் துறை ஊழியர்களின் 8 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்யப்பட்டதை உட னடியாக சம்பந்தப்பட்ட அலுவல கத்தில் கட்ட வேண்டும். அரசு நிர்ண யித்த ஊதியத்தை எவ்வித பிடித்த மும் இன்றி முழுமையாக வழங்க வேண்டும். பண்டிகைக் காலம், அரசு விடுமுறை நாட்களில் ஊதி யத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தொல்லியல் துறையில் ஆட்குறைப்பு செய்வதைக் கைவிட வேண்டும்” எனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.