tamilnadu

img

சாலையின் நடுவே திடீர் தடுப்புகள்  வாகன ஓட்டிகள் அவதி

 தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூரில் கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டின் போது புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது பட்டுக்கோட்டை பிரிவு சாலைக்கும், கல்ல ணைக் கால்வாய் (புதுஆறுக்கும்) இடையே உள்ள புதுப்பட்டிணம் கிராமத்தினர் சாலையின் குறுக்கே சென்று வரவும், பட்டுக்கோட்டை, மன்னார்குடி சாலை மேம்பாலம் தொடங்க உள்ள இடத்தில் யாரேனும் வழிதவறி சென்று விட்டால் மீண்டும் சரியான சாலையில் செல்வதற்காக புதுப்பட்டினம் அருகே சாலையில் நடுவே தாராளமாக வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரைகளில் உள்ள கா.புதூர், கோவிலூர் என 50 க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு செல்லும் வகையில் இந்த வழி பயன்பட்டு வந்தது. சாலை மிகவும் அகலமாக இருப்பதால், நடுவில் அதற்கான எச்சரிக்கை பலகையும் அமைக்கப்பட்டுள்ள தால், இதுவரை அந்த இடத்தில் எவ்வித சாலை விபத்தும் நேரிடவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறையினர் திடீரென தடுப்புகளை அமைத்துள்ளதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவ திக்குள்ளாகினார். புறவழிச்சாலையின் கிழக்கு பகுதியிலி ருந்து தஞ்சாவூரின் பூச்சந்தை, 20 கண் பாலம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் விளார் கீழ்பாலம் சாலை வந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். அதே போல் மேற்கு பகுதியிலிருந்து புதுப்பட்டினம், வெட்டிக்காடு சாலையில் செல்வோர் பட்டுக்கோட்டை கீழ்பாலம் சென்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே, சாலையின் நடுவே எப்போதும் போல் வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த சாலையை தினமும் பயன்படுத்திய பொதுமக்களும், வாகன ஓட்டி களும் மாவட்ட நிர்வாகத்துக்கும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.