தஞ்சாவூர். நவ.5- தஞ்சாவூர் பெரிகோ யிலில் ராஜராஜசோழனின் 1034- ஆவது ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. டி.கே. எஸ்.பத்மநாபன் குழுவின ரின் இசை நிகழ்ச்சியும், களிமேடு அப்பர் குழுவி னரின் திருமுறை அரங்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு சதய விழாக்குழுத் தலைவர் துரை.திருஞானம் வரவேற் றார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குநர் சி.அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், தஞ்சா வூருக்கு வடக்கில் காவிரி உள்ளிட்ட பல ஆறுகள் செல்வதால் அந்த நிலப் பகுதியை தவிர்த்து முழு வதும் பாறைப்பகுதியை கொண்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் தான் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 1004 -ஆம் ஆண்டு தொடங்கி 1010 -ஆம் ஆண்டு இந்த கோயிலை கட்டி முடித்துள் ளார். ஆறே ஆண்டுகளில் இந்த கோயில் கட்டப்பட்டுள் ளது. ஆனால் மேட்டூர் அணைக்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி சுமார் 90 ஆண்டுகள் கழித்து தான் அங்கு பிரிட்டிஷார் அணையை கட்டினா். கோயில் கட்டுமானப் பணியை மிகவும் நேர்த்தி யாகவும், திட்டமிட்டும், தன்னம்பிக்கையோடும் கட்டி முடித்துள்ளார். அதன் அமைவிடம், கட்டிடத் தன்மை, நீரை சேமிக்கக் கூடிய நீரியியல் பங்கு, அதன் தோற்றம் ஆகியவற்றை திட்டமிட்டு கட்டியுள்ளார். இந்த கோயிலை பாதுகாக்க ஏதுவாக, இக்கோயில் கட்டிய முறை, வரைபடம் ஆகியவற்றை செப்புத் தகடு களாக செதுக்கி அதனை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார். விழாவினை தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை இன்னிசை, பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. முன்னதாக விழாவை முன்னிட்டு பெரிய கோயில் மற்றும் ராஜராஜசோழன் உரு வச் சிலை மின் விளக்குக ளால் அலங்கரிக்கப்பட்டுள் ளது. பெருவுடையார் சமேத பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவின் இரண்டாவது நாளான நவ.6-ம் தேதி ராஜ ராஜசோழனின் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பெரியகோயில் கட்டுமான முறை குறித்த ஒலி, ஒளி காட்சியும் நடைபெற வுள்ளன.