தஞ்சாவூர், ஜூலை 6 - பேராவூரணி அருகே முடச்சிக்காடு-நெல்லடிக்கு ளம் பாசன ஏரியின் ஆக்கி ரமிப்பை அகற்றி, தூர்வாரி தர வேண்டும் என விவசாயிகள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாட்டிற்கு அடு த்தபடியாக பேராவூரணி தொகுதியில் தான் அதிக அள வில் பெரிய, சிறிய, 70-க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள், பாச னக் குளங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 80 சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. குடி மராமத்து என்ற பெயரில் சில ஏரிகள் மட்டும் தூர்வாரப்ப டுகிறது. கல்லணை கால்வாய் பாசன கோட்டத்தின் கடை மடை பகுதியாக உள்ளதால் இந்த ஏரிகள் நிரம்பினால் தான் பாதிப்பின்றி சாகுபடி முழுமையாக நடைபெறும். இந்நிலையில், பேராவூரணி அருகே 20 ஏக்கர் 87 செண்டு பரப்பளவு கொண்ட முடச்சிக்காடு- நெல்லடிக்குளம் பாசன ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது சிறிய குட்டை போல காட்சி யளிக்கிறது. ஏரியை சில ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கி ரமித்து ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்து வரு கின்றனர். இதனால் இந்த நெல்லடி க்குளம் ஏரியை பயன்ப டுத்தி 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வந்த 200 -க்கும் மேற்பட்ட விவசாயி கள் விவசாயம் செய்ய முடி யாமல் தவித்து வருகின்றனர்.
இந்த ஏரியில் தண்ணீர் நிர ம்பினால் தான் குடிதண்ணீர் வசதி மற்றும் அப்பகுதியில் நீர்மட்டம் உயரும். எனவே, ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி தரும்படி முடச்சிக்காடு விவசாயிகள் சார்பில், மாவட்ட ஆட்சி யர் ம.கோவிந்தராவ், வட்டா ட்சியர் க.ஜெயலட்சுமி, தஞ்சை நாடாளுமன்ற உறு ப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் மா.கோவி ந்தராசு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் சி.சௌந்த ர்ராஜன், சி.ரெத்தினசாமி ஆகியோர் கூறுகையில், வீரியங்கோட்டை-1, முட ச்சிக்காடு புல எண் 108 ல் உள்ள உப்புக்குளம் என்கிற நெல்லடிக்குளம், பேராவூ ரணி வழியாக வரும் ஆன ந்தவல்லி வாய்க்கால் தண்ணீர் மூலம் இந்த ஏரி யில் தண்ணீர் தேக்கி இதன் மூலம் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வந்தோம். கடந்த 10 வருடமாக மேட்டூரில் நீர் குறைந்ததால் தண்ணீர் நிரப்ப முடியாமல் போனது. இந்த சமயத்தில் சிலர் ஏரியை ஆக்கிரமித்து விட்டனர். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் அரசோ, அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, உடன டியாக போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி தண்ணீர் நிரப்பித் தர வேண்டும். இந்த ஏரியை நம்பி பாசனம் செய்து வரும், இப்பகுதி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” என்றனர்.