tamilnadu

எல்ஐசி திட்டங்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம்

 

கும்பகோணம், பிப்.1-  தஞ்சை மாவட்டம் பாப நாசம் வட்டாரப் பகுதிகளில் எல்ஐசி பாலிசி மற்றும் சேவை கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி பயணம் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. பிரச்சாரத்தை பாபநாசம் எல்ஐசி சாட்டிலைட் கிளை மேலாளர் மதியழகன் தொடக்கி வைத்தார். வளர்ச்சி அதிகாரிகள் ஜெய் சங்கர், சங்கரி அலுவலக உதவி நிர்வாக அலுவலர் ரத்தினவேல், முன்னோடி முகவர்கள் டி ராஜேந்திரன், அமிர்தலிங்கம், ரவிச்சந்தி ரன் காந்தி, மணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கும்பகோணம் ஒன்று கிளை அலுவலகத்தில் இருந்து வந்த விளம்பர வாகனம் பாப நாசம் வட்டார பகுதிகளான பாபநாசம் அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் எல்ஐசி திட்டங்கள் சேவைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர். 

;