கும்பகோணம், செப்.30- கும்பகோணத்தில் தொலைக்காட்சி, பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் குய்க்கர் பஷார் புதிய ஷோரூம் திறப்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் அன்பழகன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் டாக்டர் பெஷன்ட் ரோட்டில் அமைந்துள்ள குயிக்கர் பஷாரின் புதிய கிளையை திறந்து வைத்தனர். சின்னத்திரை நடிகை ஆயில்யா மானசா, பல குரல் பேச்சாளர் ஈரோடு சஞ்சய் ஆகியோர் விற்பனை யை தொடங்கி வைத்தனர். இக்கடையில் குயிக்கர் பஜார் செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும், நேரடியாகவும் பொருட்களை வாங்கலாம். விழாவில் கடையின் மேலாளர் வினோத் நன்றி தெரிவித்தார்.