தமிழக - கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு
திருவனந்தபுரம், செப்.25- கேரள- தமிழக முதல்வர்கள் சந்திப்பில் இரு மாநிலங்களும் செய லர் மட்டத்திலான 5 அதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைத்து நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் புதனனன்று (செப்.25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இரு மாநில நதிநீர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்கள் தெரிவித்த தாவது:
இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனைகளில் பார பட்சமில்லாமல் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வுகாணப்படும். இரு மாநில மக்களும் சகோதரர் களாக கருதுகிறவர்கள். எனவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் விவாதத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கனவே உள்ள ஒப்பந் தம் 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. அது குறித்து மறுபரிசீலனை செய்ய இரண்டு அரசுகளும் ஒப்புதல் தெரி வித்தன. இரண்டு அரசுகளும் செய லாளர்கள் மட்டத்திலான 5 பேர் கொண்ட குழுக்களை ஒருவாரத்து க்குள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இதே குழுக்கள் ஆனைமலை, தீராநல்லார், மணக் கடவு திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கும். அதன்படி பொது வான முடிவு எட்டப்படும்.
முல்லைப் பெரியாறு திட்டத்திலி ருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அங்கு வேறு சில பிரச்சனைகள் உள்ளன. அது குறித்தும் பேசப்பட்டது. இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் நதிநீர் பிரச்சனைகள் குறித்த முன்னேற்றம் குறித்து 6 மாதங் களுக்கு ஒருமுறை சந்தித்து விவாதிப் பார்கள். பாண்டியாறு திட்டம் குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்த வும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின்போது தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார். முன்னதாக புதன் காலை, திரு வனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்தார். அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார். பின்னர் இரு மாநில குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செ யலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரள மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர்கலந்து கொண்டனர்.