tamilnadu

img

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற்றிடுக விவசாயிகள் சங்கம் பிரச்சார இயக்கம்

சேலம், ஜுன் 27- மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டங்களை கண் டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொங்கணா புரத்தில் விவசாயிகள் சந்திப்பு இயக் கம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு விவசாயி களுக்கு எதிரான அவசரச் சட்டங்களை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட வற்றால் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய விவசாயி கள் விரோத நடவடிக்கைகளை விளக்கி சேலம் மாவட்டம் கொங்கணா புரம் ஒன்றியம் எட்டிகுட்டைமேடு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் செம்மலையப்பன், ஐடிபிஎல் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.