ஏற்காடு, மார்ச் 2- சேலம் மாவட்டம், ஏற்காட்டில், பிரதம மந்திரி யின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக் கும் முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஏற்காடு டவுன் பஞ்சாயத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பஞ்சாயத்துகளை சேர்ந்த 700க் கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து விண்ணப் பங்கள் மற்றும் சான்றுகள் பெறப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்காடு நகர முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனா ளிகளுக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப் பட்ட காப்பீடு திட்ட அட்டைககளை வழங்கினார். ஏற்காடு ஒன்றிய உறுப்பினர் கலைவாணி ஏற் பாடு செய்த இம்முகாமில், ஏற்காடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆறுமுகம், வினோத் குமார், பாபு, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.